முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, 8 November 2013

திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல்! -200 பேர் கைது

லங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது.


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் மமக அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா, மனிதநேய வணிகர் சங்கச் (MVS) மாநில செயலாளர் கலந்தர் மாவட்டத் தலைவர் ஹலிலூர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் கூத்தாநல்லூர் சீனி ஜெகபர் உட்பட 200 பேர் கலந்துக்கொண்டு கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment