முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday, 9 November 2013

'கேம்பஸ் டே': முத்துப்பேட்டையில் நடைபெற்ற கேம்பஸ் ஃபிரண்டின் கொடி ஏற்று நிகழ்ச்சி!

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான நவம்பர் 07-ம் நாள் ஒவ்வோர் ஆண்டும் ‘கேம்பஸ் டே’ என மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். சென்ற கேம்பஸ் டே முதல், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினமான நவம்பர் 11 நமது தேசிய கல்வி தினம் வரையிலான ஐந்து நாட்கள், அரசுகளின் தவறான கல்வி கொள்கை குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 


ஏகலைவன் புரஸ்கர் விருது, கொடி ஏற்றுதல், செமினார், பொது நிகழ்ச்சி, மற்றும் பேரணி என்பன இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கொடி எற்றும் நிகழ்ச்சி நேற்று (08/11/13) நடைபெற்றது.

அதில் கேம்பஸ் ஃப்ரண்டின் ஒருங்கிணைப்பாளர் தமிம் அன்சாரி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். அதன் பின்பு நகர செயற்குழு உறுப்பினர் ராசிக் பரீத் கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து   நிகழ்ச்சியின் இறுதியாக நகர செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஜாக் நன்றியுரை ஆற்றினார்.





No comments:

Post a Comment