டேராடூன்: பாபா ராம்தேவுக்கு சொந்தமான நிறுவனங்களில் காலால் துறையினர் ரெய்டு நடத்தினர். அதில் அவரது நிறுவனங்களில் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரபல யோகா பயிற்றுனர் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி மருந்து மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் சோப்புகள் மற்றும் இதர பொருட்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறது பதாஞ்சலி நிறுவனம்.
மத்திய கலால் துறையினர், பாபா ராம்தேவுக்கு சொந்தமான இந்த நிறுவனங்களில் திடீர் ரெய்டு நடத்தினர். அதில், 20 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பும் முயற்சியில் மத்திய கலால் துறை ஈடுபட்டுள்ளது.

No comments:
Post a Comment