மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் 2 நாள் பயணமாக இன்று இலங்கை சென்றார். அங்கு, அமைதிப் போரின்போது மரணம் அடைந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி பெரிஸ் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, சல்மான் குர்ஷித் முன்னிலையில் இந்தியா-இலங்கை இடையே இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய உதவியுடன் இலங்கையின் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைப்பது மற்றும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை பயிற்றுவிப்பதற்கான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகின.

No comments:
Post a Comment