திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாடிய போது ராக்கெட் வெடி கூரையில் பட்டு பாலு என்பவர் வீட்டில் தீ பற்றி உள்ளது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, வீட்டில் வசித்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். தகவலறிந்த மன்னார்குடி தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment