முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 3 October 2013

பெட்ரோல் பங்க்களில் சமையல் எரிவாயு விற்கும் திட்டம்! -5ம் தேதி வீரப்ப மொய்லி தொடங்கி வைக்கிறார்!


மையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியாவின் 5 பெருநகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்களின் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை மத்திய மந்திரி வீரப்ப மொய்லி பெங்களூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.

முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களில் எண்ணை நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்களில் மட்டும் 5 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டர்கள் விற்கப்படும்.

பெட்ரோல் பங்க்கள் நள்ளிரவு வரை திறந்திருப்பதால் இந்த புதிய திட்டத்தின் மூலம் வெளி மாவட்டங்களில் இருந்து மேற்கண்ட பெருநகரங்களில் தற்காலிகமாக தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், மானிய விலையில் இந்த சிலிண்டர்கள் விற்கப்படாது, வெளி மார்க்கெட் விலைக்கே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment