உத்தர பிரதேச மாநிலம் முஸஃபர்நகரில் சங்க் பரிவார்களுடன் இணைந்து ஜாட் இனத்தவர்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய கலவரத்தின் போது தாங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி 3 பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
முஸஃபர்நகரின் புகானா கிராமத்தைச் சார்ந்த பெண்கள், தாங்கள் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், தங்களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்களுடைய புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸ் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.
கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டார்கள் என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரமாகும். பலர் காணாமல் போயுள்ளனர். 40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

No comments:
Post a Comment