முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவான்ஓடை, வயிரவன்சோலையில் ஒரு வீட்டில் வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து முத்துப்பேட்டை போலீசார் ஜாம்பவான்ஓடையில் சோதனை நடத்தினர்.
அப்போது ஜெயபால் என்பவரின் வீட்டில் பயங்கர வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூன்றரை கிலோ வெடிமருந்துகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து பயங்கர வெடிபொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக ஜெயபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தீவிரவாத சதி செயலுக்காக வெடிமருந்துகள் பதுக்கி வைக்கபட்டதா? என்ற கோணத்தில் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment